Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: இளைஞரணி 2வது மாநாடு ஒத்திவைப்பு..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:20 IST)
திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சேலத்தில் 24ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக அறிவித்துள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 17ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு சென்னை வெள்ளம் காரணமாக 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments