Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் ராமஜெயம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2015 (22:43 IST)
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு ஜனவரி மாதத்திற்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்திரவிட்டது.
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை குறித்து போலீசார் தனிப்படை அமைத்தும் கண்டுபிடிக்கமுடியில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
 
ஆனால்,  ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. இந்த வழக்கின் தற்போதைய அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Show comments