Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (17:00 IST)
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 

 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்த சீனிவாசன்(45), இன்று காலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
 
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அருகே ஒரு மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து, முகத்தில் என சரமாரியாக வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.
 
அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, காவல் துறையினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments