Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (17:00 IST)
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 

 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்த சீனிவாசன்(45), இன்று காலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
 
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அருகே ஒரு மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து, முகத்தில் என சரமாரியாக வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.
 
அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, காவல் துறையினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments