Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை! – திருநெல்வேலியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:09 IST)
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் பொன்னுதாஸ். 38வது வார்டு திமுக செயலாளராக இருந்து வரும் இவர் பாளையங்கோட்டையில் மதுபான பார் ஒன்றையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிட பொன்னுதாஸின் தாயார் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுக்கூடத்தை மூடிவிட்டு வீடு திரும்பிய பொன்னுதாஸை அவரது வீட்டின் அருகே மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments