Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக-வுக்கு குழிபறித்த "குடிமகன்கள்" - அடடே.....ரிப்போர்ட்

திமுக-வுக்கு குழிபறித்த "குடிமகன்கள்" - அடடே.....ரிப்போர்ட்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:28 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், உடனே மதுவிலக்கு கொண்டு வரப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதால் தான் தமிழக குடிமகன் தேர்தலின் போது, காலை விரிவிட்டதாக கூறப்படுகிறது.
 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, அதிமுக 134 தொகுகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார்.
 
இந்த நிலையில், திமுக தோல்வி குறித்து, அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசிய போது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், உடனே மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கருணாநிதி கூறினார்.
 
ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, அதிமுக ஆட்சிக்கு வந்தால்  படிப்படியாக மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். ஜெயலலிதாவின் இந்த வார்த்தை தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
 
உடனே மதுக்கடைகள் மூடப்படும் என கருணாநிதி கூறியதால் தான், மதுக்குடிப்பவர்கள் பயந்துபோய் அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டனர். ஒரு தொகுதியில் சுமார் 5000 வாக்குகளாவது இப்படி திசைமாறி சென்றுஇருக்கும். இது போல சில பல செயல்கள் தான் திமுக தோல்விக்கு முக்கிய காரணம் என அடுக்கினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments