Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:08 IST)
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
 
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆண்டிபட்டி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலராக தேர்வு பெற்றவர் தமிழ்செல்வன். இவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் திடீரென தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறினார். 
 
மொத்தம் 14 வார்டுகள் இருந்த நிலையில் அதில் தி.மு.க 7, அ.தி.மு.க 7 என சம அளவில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் தான் 8-வது வார்டு திமுக கவுன்சிலரான தமிழ்செல்வன் திடீரென அ.தி.மு.கவில் இணைந்தார். இவரது முடிவால் கடமலை-மயிலை ஒன்றிய சேர்மன் பதவி அ.தி.மு.க வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சில தமிழ்செல்வன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments