Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:08 IST)
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
 
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆண்டிபட்டி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலராக தேர்வு பெற்றவர் தமிழ்செல்வன். இவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் திடீரென தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறினார். 
 
மொத்தம் 14 வார்டுகள் இருந்த நிலையில் அதில் தி.மு.க 7, அ.தி.மு.க 7 என சம அளவில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் தான் 8-வது வார்டு திமுக கவுன்சிலரான தமிழ்செல்வன் திடீரென அ.தி.மு.கவில் இணைந்தார். இவரது முடிவால் கடமலை-மயிலை ஒன்றிய சேர்மன் பதவி அ.தி.மு.க வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சில தமிழ்செல்வன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments