Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை திட்டமிட்டு சதி செய்து கொன்றது யார் தெரியுமா?: இது என்னப்பா புது கதையா இருக்கு!

ஜெயலலிதாவை திட்டமிட்டு சதி செய்து கொன்றது யார் தெரியுமா?: இது என்னப்பா புது கதையா இருக்கு!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (09:15 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு திமுகவின் சதியே காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தினமும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சியான திமுக உட்பட பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரது மரணத்தின் மர்மத்தை போக்கி நாட்டு மக்களுக்கு தெளிவு கிடைக்க அவரது மரணம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அவரது மரணத்திற்கு திமுகவின் சதிதான் காரணம் என அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், அதிமுகவை ஒழிப்பதற்காக மறைமுகமாக சதித்திட்டங்களை திமுகவினர் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். ஜெயலலிதாவின் மீது எந்தவித குற்றமும் கிடையாது. வேண்டுமென்றே அவர்கள் மீது பழிசுமத்தி அவரை திமுகவினர் சிறைக்கு அனுப்பினர்.
 
சிறைக்கு சென்றால் தான் குறுகிய காலத்திலேயே ஜெயலலிதா இறந்துவிடுவார் என திட்டமிட்டனர். திமுக செய்த சதியால் தான் ஜெயலலிதா இறந்தார். அவர்கள் தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments