Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர்விட்டு கதறி அழுத கருணாநிதி?

கண்ணீர்விட்டு கதறி அழுத கருணாநிதி?

Webdunia
புதன், 25 மே 2016 (14:43 IST)
திமுக தலைவர் கருணாநிதி கண்ணீர் விட்டு கதறி அழுத தகவல் அறிந்த தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


 

தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக மாவட்ட ரீதியாக பிரித்துள்ள மாவட்டத்திலும்  2 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் கட்டாயம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டது.
 
திமுக தலைமை கணக்குப்படி, சுமார் 130 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறிக்க திமுக திட்டமிட்டது. ஆனால், மாவட்டச் செயாலளர்களின் மோசமான செயல்பாடுகளால், திமுக 89 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது.
 
இதனால், தோல்வியை தழுவிய வேட்பாளர்கள் பலர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து தங்களது தோல்விக்கான காரணத்தை கூறி புகார் தெரிவித்துவருகின்றனர்.
 
இதேபோல கோவை பகுதியில் போட்டியிட்ட மீனா லோகு என்ற பெண் வேட்பாளர், தனக்கு திமுக மாவட்ட செயலாளர் வீரகோபால் ஒதுத்துழைக்கவில்லை என்றும், தனது தோல்விக்கு திமுக நிர்வாகிகளும் ஒரு காரணம் என கூறி, அழுது புலம்பியுள்ளார். இதே போல, தமிழகமும் மழுக்க திமுக நிர்வாகிகள் செய்த உள்ளடி வேலைகள் குறித்த புகார் மலைபோல் தினமும் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
 
இதைக் கேட்ட திமுக தலைவர் கருணாநிதி ஒரு கணம் அதிர்ந்துப் போய் தன்னை அறியாமலே கண்ணீர் விட்டாராம். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து பதறிப்போய், தலைவரே.. கலங்காதீங்க, உங்க கண்ணில் கண்ணீர் வந்தால், எங்க கண்ணில் ரத்தம் வரும் என உருகி மனம் வெடித்துள்ளனர். இதனையடுத்தே அவர் ஆறுதல் அடைந்தாராம். 
 
 வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments