Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி..அதிமுக, பாஜகவை எதிர்கொள்ள ஆலோசனை..!

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (16:54 IST)
முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அதிமுக, பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம் என்றும், திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 
இந்த பேச்சுவார்த்தை குறித்து  டிஆர் பாலு கூறியபோது, காங்கிரஸ் கட்சி விருப்ப பட்டியல் எதையும் வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கேட்டதில்  தவறு இல்லை என்று கூறிய நிலையில் நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றார்.
 
 இந்த நிலையில் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த பேச்சு வார்த்தையின் போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த முடிவு தெரியும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments