Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை.. சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு..!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:41 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருக்கும் தென்மாவட்ட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், பிற மாநிலங்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் கூறியுள்ளார்.

மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

 தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி என்பது இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஞாயிறு அன்று இரவே பலர் மீண்டும் சென்னை திரும்ப முன்பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் இது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments