Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2015 (08:02 IST)
பட்டாசுகளை ரயிலில் எடுத்துச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவலர்கள் எச்சரித்துள்ளனர். 


 

 
சென்னை மூர்மார்க்கெட் மின்சார ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
 
இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்கும் விதமாகவும், அவர்கள் அறியாமையால் கொண்டு செல்வதை தவிர்க்கும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே பணியில் இருக்கும் காவல்துறையினர் பட்டாசு உள்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்கிறவர்களை கண்காணிப்பார்கள்.
 
தீபாவளி சமயத்தில் இதற்கென்று தனிப்படை ஒன்று அமைக்கப்படும். கடந்த ஆண்டு பட்டாசுகளை எடுத்துச்செல்ல முயன்ற 25 பேரை கண்டித்து, தலா ரூ.1,000 அபராதம் விதித்தோம். இந்த ஆண்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments