Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்றவுடன் திண்டுக்கல் ஐ லியோனி செய்த முதல் வேலை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (18:02 IST)
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி ஏற்றுக்கொண்டார் என்பது தெரிந்தது அவருக்கு திமுகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பதவியேற்ற உடன் முதல் முறையாக அவர் தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகம் சென்று அங்கு உள்ள புத்தக சேமிப்பு இடங்களை பார்வையிட்டார். அவருடன் மேனேஜிங் டைரக்டர் மணிகண்டன் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதுகுறித்து திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கீழ் இயங்கும் அடையார் புத்தக சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டேன்.மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் IAS உடனிருந்தார். நடைபெறும் பணிகள் பற்றி தெரிந்து கொண்டேன்.பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்
 
திண்டுக்கல் ஐ லியோனி இந்த பதவியை ஏற்பதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதும் எதிர்ப்பையும் மீறி அவர் தற்போது பதவி ஏற்றுக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments