Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் போதையில் ரகளை செய்த பெண்மணி

Webdunia
சனி, 25 ஜூலை 2015 (22:15 IST)
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், போதையில் இருந்த பெண் ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே 40 வயது உடைய பெண் ஒருவர், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். இதனால், போதையில் தள்ளாடியபடியே பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்துக்கு நின்று கொண்டிருந்த சிலர் மீது இடித்துள்ளார். சிலர் மீது இடிப்பது போல் சென்றுள்ளார். இதை அங்கிருந்த பயணிகள் சிலர் தட்டிக் கேட்க, அந்த பெண்மணி ஆபாச வார்த்தைகளால் அனைவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். மேலும், அவரால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாத சூழ்நிலையில், அப்படியே சரிந்தார். போதைப் பெண்மணியைக் காம காண கூட்டம் அலை மோதியது. ஒரு கட்டத்தில் அவர்களக்கும் செந்தமிழ் அர்ச்சனை விழவே அவர்களும் அந்த இடத்தைவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.
 
நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் திண்டுக்கல் பேருந்து நிலயைத்தில் உள்ள காவலர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இது நாள் வரை, ஆண்கள் மட்டும்தான் மதுவுக்கு அடிமையாகி இருந்தனர். தற்போது, பெண்களும் மது அருந்தி பொது இடத்தில் ரகளை செய்யும் அளவு நிலைமை எல்லை மீறி சென்றுள்ளது.

என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா?
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments