Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. உடல்நிலை எதிரொலி - காலை 7 மணிக்கு காவலர்கள் பணிக்கு வர உத்தரவு

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2016 (01:01 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, நாளை காலை 7 மணிக்கெல்லாம் அனைத்து காவல் அதிகாரிகளும் பணிக்கு சீருடையில் வந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், சென்னையில் டிஜிபி  ராஜேந்திரன் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தின் முடிவில், மறு உத்தரவு வரும் வரை உயர் போலீஸ் அதிகாரிகள் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அதேபோல், அனைத்து காவல் அதிகாரிகளும் இன்று காலை 7 மணிக்கு சீருடையுடன் காவல் நிலையத்தில் ஆஜராகி விட வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments