Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி - ஜனநாயகத்திற்கு தோல்வி: மகேந்திரன் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (23:57 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, ஒரு தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியதாவது:-
 
ஆர்.கே. நகரில், தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட்டு, இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். அதனால், ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஜனநாயகம் தோற்றுவிட்டது.
 
இந்த தேர்தலில், நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாக இருந்தது. இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிகின்றது என்றார்.
 

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

Show comments