Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் வரவில்லை - பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:15 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய, இன்று சென்னை வருவதாக இருந்த டெல்லி போலீசாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
டெல்லியில் நேற்று காலை சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை, தினகரன் தரப்பிற்கு பெற்றுத்தர ரூ.1.30 கோடி முன்பணம் பெற்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
எனவே,  தினகரனிடம் விசாரணை செய்வதற்காக டெல்லி போலீசார் இன்று சென்னை வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.  போலீசாருக்காக விமான பயண சீட்டுகள் நேற்று முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவை திடீரெனெ ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி போலீசாரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரிடம் தொடர்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதால், அவரிடமிருந்து முழுமையான தகவல்களை திரட்டி பிறகு டெல்லி போலீசார் சென்னை வருவார்கள் என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments