Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரை ஆபாசமாக திட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது புகார்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (21:38 IST)
முதலமைச்சரை ஆபாசமாக திட்டியதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்ட கவுன்சிலரும், அதிமுக வழக்கறிஞருமான ஏ.பி.மணிகண்டன் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றினை அளித்துள்ளார்.
 
அதில், ”கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று மேச்சேரியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் அவர்களை மிகவும் ஆபாசமாக கீழ்த்தரமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.
 
தமிழக முதல்வர் ஒரு பெண்மணி என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் மிகவும் அசிங்கமாக பேசினார். அவரை தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தமிழக முதல்வரை மிகவும் தரக்குறைவாக பேசியதோடு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும் மிகவும் தவறாக திட்டினார்.
 
எனவே மேற்கண்ட இருவர் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments