Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.தீபா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்: போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்!

ஜெ.தீபா ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்: போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (09:57 IST)
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்திருந்தார்.


 
 
இந்நிலையில், எம்ஜிஆரின் 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் இன்று காலை முதலே கடற்கரை சாலையில் தீபா ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
 
தீபா எம்.ஜி.ஆர்.சிலைக்கு மரியாதை செலுத்த வந்த போது அவரது ஆதராவாளர்கள் தீபாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். அதிமுக தலைமையை தீபா ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
தீபா வந்ததால் அந்த இடம் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்பட்டது. போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என தீபா ஆதரவாளர்கள் கூறினர். தீபா அங்கிருந்து சென்றபின்னர் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தீபாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
 
தீபாவுக்கு ஆபத்து இருப்பதால் தமிழக காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் ஜெயலலிதா, ஜெ.தீபா உருவப்படம் பாக்கெட் சைஸ் அட்டையை வைத்திருந்தனர். மேலும் தீபாவுக்கு ஆதரவான பேனர்களையும் வைத்திருந்தனர்.
 

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments