Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:20 IST)
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களும் அந்த மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டின் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments