Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேர கெடு முடிந்தது.. எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு..

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (14:26 IST)
எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  தயாநிதி மாறன் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கில் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டும்  எனக் கூறிய தயாநிதி மாறன், மன்னிப்பு கேட்க 24 மணி நேரம் அவகாசம் கொடுத்த நிலையில் அந்த அவகாசம் முடிந்ததால் தற்போது அவர் சொன்னபடியே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 95% மேல் பயன்படுத்தியுள்ளேன்.  தொகுதி மேம்பாட்டு நிதியை 75%  பயன்படுத்தவில்லை என புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி  பேசியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments