Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார், மருமகள் கூட்டணியில் கொலை சம்பவம்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (13:38 IST)
சிவகங்கை மாவட்டத்தில் மாமியார் மருமகள் சேர்ந்து ஒரு பெண்ணை தாக்கியதில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


 

 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேர்ந்த சீதாலட்சுமி(45) என்பவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதிக்கும்(35) தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பிரச்சனையில் ரேவதி மற்றும் அவரது மாமியார் கூட்டு சேர்ந்து சீதாலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் சீதாலட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ரேவதி மற்றும் அவரது மாமியார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments