Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"இடஒதுக்கீட்டில் வந்தவனே… உன் தலையை வெட்டுவோம்” - ஐஐடி தலித் மாணவருக்கு கொலை மிரட்டல்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (15:28 IST)
சென்னை ஐஐடி-யில் படிக்கும் மாணவர் அபினவ் சூர்யா தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டதை அடுத்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
 

 
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர் அபினவ் சூர்யா. சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டார். இயக்குநர் ரஞ்சித்துடன் எடுத்துக்கொண்ட படத்தை தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.
 
இந்தப் படத்தைப் பார்த்து, பலர் அபினவ் சூர்யாவின் இன்பாக்ஸில் மிகக் கீழ்தரமான குறுந்தகவல்களை அனுப்பியுள்ளனர்.
 
“இடஒதுக்கீட்டில் வந்தவனே… உன் தலையை வெட்டி கூறுபோட்டு பன்றிக்குப் போட வேண்டும்!”
 
“சராசரி அறிவுகூட இல்லாத இடஒதுக்கீட்டில் வந்தவர்கள்” என்று தொடங்கி எழுத முடியா வசைகளை அனுப்பியுள்ளனர்.
 
அபினவ் சூர்யா, “இவையாவது பரவாயில்லை. என் தாயையும் என் சகோதரிகளையும் கீழ்த்தரமாக எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் பகிர முடியாதை” என்கிறார்.
 
இந்தக் குறுந்தகவல்கள் ஐஐடியில் நிலவி வரும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வன்மத்தைக் காட்டுகின்றன என்றும், தலித் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களின் பின்னணியுடன் இத்தகைய வன்மமான தாக்குதல்கள் இருப்பதை கவனிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது.

தகவல் உதவி : Viji's Palanichamy

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments