Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (18:21 IST)
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள்  குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரோன இரண்டாவது அலை வேகமாகப் பரவிவந்த நிலையில் சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

பின்னர் 23 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, 11 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே ஊரடங்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் துறை அதிகாரிகள், பொதுத்துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments