Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ்காரரை ஒருமையில் திட்டிய கலெக்டர் ! அதிருப்தியில் காவல்துறை!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (07:42 IST)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கொரோனா தடுப்புப் பணியில் இருந்த காவலரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் இரவுப் பகலாக உழைத்து வருகின்றனர். இதில் விடுப்பே இல்லாமல் உழைத்து வருகிறார்கள் காவல்துறையினர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சக்குப்பம் பகுதி சப் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இரு தினங்களுக்கு முன்னர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து அதிகாரிகளை ஒருமையில் திட்டி அவமானப் படுத்தியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தனது மேலதிகாரிகளிடம் புகார் சொல்ல, இது சம்மந்தமாக கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments