Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாணவி பலியான சம்பவம்: ஆறுமுகம் பயிற்சியாளரே இல்லை

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (15:46 IST)
கோவையில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் என்.எம்.டி.ஏ பயிற்சியாளரே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் இரண்டாவது மாடியில் இருந்து குதிப்பது எப்படி என்ற பயிற்சியை லோகண்யா என்ற 19 வயது கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்தார். கீழே மாணவர்கள் வலையுடன் தயார் நிலையில் இருந்தபோது பயிற்சியாளர் மாணவியை கீழே தள்ளிவிட்டார். ஆனால் எதிர்பாராத வகையில் முதல்மாடியின் சன்ஷேடில் விழுந்த லோகண்யா தலையில் பலமான காயமேற்பட்டு மரணம் அடைந்தார்.
 
இச்சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஆறுமுகம் எம்.எம்.டி.ஏ பயிற்சியாளரே இல்லை என்றும் அவரிடம் இருக்கும் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். பயிற்சியாளரே அல்லாத ஆறுமுகம் தான் மத்திய அரசின் ஊழியர் என கூறி தொடர்ந்து 7 வருடமாக இப்படி செய்து வந்துள்ளார். 
 
பயிற்சி அளிப்பதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் இவர் தலா 50 வீதம் பெற்றுள்ளார். போலீஸார் தொடர்ந்து ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளது. இத்தனை நாளாய் இந்த போலி ஆசாமியை கண்டுபிடிக்காமல் ஒரு உயிரை காவு வாங்கியதற்கு பின், அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுகிறது. எது எப்படியாயினும் ஒரு இளம்பெண்ணின் உயிர் போய்விட்டதே...

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments