Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவிற்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (17:04 IST)
சசிகலா புஷ்பாவின் புகார் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று, நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில், சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சசிகலா புஷ்பா மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments