சசிகலா புஷ்பாவின் புகார் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று, நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில், சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அதிமுக மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சசிகலா புஷ்பா மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.