Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுவிக்கப்படுவார்களா நீட் மாணவர்கள்? – நீட் முறைகேடு குறித்து நீதிபதிகள்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:10 IST)
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யாவின் தந்தையே குற்றத்திற்கு முழு பொறுப்பு என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்குமார் என்ற மாணவரும், அவரது தகப்பனாரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்த விசாரணையில் இதுபோன்று 10 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக பிடிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உதித்சூர்யா ஆள்மாறாட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்துக்கு உதித்சூர்யாவின் தந்தையே முழுக்காரணம் என்றும், மாணவரின் வயதை கருத்தில் கொண்டு அவரது முன் ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக ஏற்று விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் வயது முதிர்ச்சியில்லாத மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க நீதிபதிகள் விரும்ப மாட்டார்கள் என தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் விவகாரங்களிலும் அவர்கள் சிறியளவிலான தண்டனை அல்லது ஆலோசனையுடன் விடுதலை செய்யப்படாலாம் எனவும், குற்றத்திற்கு காரணமான அவர்களது தந்தையர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments