Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (17:21 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குற்றவாளியை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு நேற்று புழல் சிறையில் நீதிபதி சங்கர் முன்னிலையில் நடந்தது. இதில் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தின் பெட்டிக்கடைக்காரர் சிவக்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.

இதில், சுவாதியின் தந்தை ராம்குமார்தான் குற்றவாளி என அடையாளம் காட்டியதாய் கூறப்படுகிறது. இதில் சிவகுமார், அந்த கொலையாளி பார்ப்பதற்கு ராம்குமார் போலத்தான் இருந்தான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றத்தின் மனு அளித்திருந்தனர். அந்த வழக்கு இன்று சென்னை பெருநகர 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனால், ராம்குமாரை இன்று மதியம், சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராம்குமாரை மூன்று நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். போலீஸ் விசாரணையில் இன்னும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments