Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா வீட்டின் முன்பு தம்பதிகள் தீக்குளிக்க முயற்சி: வேட்பாளரை மாற்ற கோரிக்கை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (19:42 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு தம்பதிகள் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வேட்பாளர்களை மாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி தம்பதிகள் கோபு-பரிமளா ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முற்பட்டனர். இதனை கண்ட காவலர்கள் உடனடியாக அவர்களை தடுத்து அவர்களை காப்பாற்றி சமாதானப்படுத்தினர்.
 
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தம்பதியினருக்கு சொந்தமான நிலத்தை கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபு அபகரித்து எடுத்துக்கொண்டதாகவும், அவரை வேட்பளராக அறிவிக்கக்கூடாது என வலியுறுத்தி தான் இந்த போராட்டத்தை நடத்தியதாக தம்பதிகள் கூறினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Show comments