Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (16:34 IST)
சென்னையில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவக் கோர்சுகளுக்கான கலந்தாய்வு, 17-ம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மழை எச்சரிக்கையினால், கலந்தாய்வு தற்போது 21-ம் தேதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
 
2024-2025 ஆண்டுக்கான சித்தா (BSMS), ஆயுர்வேதா (BAMS), யுனானி (BUMS), ஓமியோபதி (BHMS) போன்ற பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEET தேர்வில் தகுதி பெற்றவர்களுக்காக நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு தற்போது 21-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும்.
 
முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும். 
 
கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மட்டும் தான் தமிழகமா? முதல்வர், துணை முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கனமழை எச்சரிக்கை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு..!

மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர்: மாநில அரசு அறிவிப்பு

கருணாநிதி குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு..!

2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை: மாசு கட்டுப்பாட்டு குழு

அடுத்த கட்டுரையில்
Show comments