கொரோனா விதிமீறல் வழக்குகள் முழுவதும் ரத்து! – தமிழக அரசு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (12:46 IST)
தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தது.

அதன்படி மாஸ்க் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாதத், ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றியது என அரசின் கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய சென்னை தவிர பிற மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஶ்ரீவாரி வைகுண்ட வாசல் தரிசனம்: முக்கிய அறிவிப்பு..!

வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments