கொரொனா 3 வது அலை..நித்யானந்தா கருத்து

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:22 IST)
கொரொனா 3 வது அலை குறித்து சாமியார் நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:  டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா 3 வது அலை குறித்து இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வருபவரும் கைலாசா நாட்டில் வசிபத்து வருபவருமான நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தனது காலடி இந்தியாவில் பட்டால்தான் கொரொனா தொற்று அங்கிருந்து வெளியேறும். வரும் புரட்டாசி மாதம் கொரொனா 3 வது அலை பரவும்…. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப்பார்த்தால் கொரொனாவை மக்கள் வரவேற்பதுபோல் இருக்கி்றது.

கொரோனா முதல் இரண்டாம் அலைகளைவிட டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த வைரஸ்கள் கொரொனாவின் அப்டேட்டுகளாக வந்துள்ளது…கொரோனா 3 வது அலை மோசமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments