Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:07 IST)
ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
 ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என விற்பனையாகி வந்த கொத்தமல்லி ஒரு கட்டு 100 ரூபாய் என விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொத்தமல்லியை பயிரிட்டவர்கள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதனால் கொத்தமல்லியின் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்களிலும் கொத்தமல்லி விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை ஒரு கட்டு கொத்தமல்லி விற்கப்படுவதாகவும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு கொத்தமல்லி கட்டு விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த வாரம் வரை பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி திடீரென 100 ரூபாய்க்கு விற்கப் படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments