Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாழம்பூ என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பண வசூல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் மனு!

J.Durai
செவ்வாய், 7 மே 2024 (07:38 IST)
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி.
 
இந்நிலையில்,சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் குலுக்கள் சீட்டு நடத்துவதாகவும்,அதில் சேர்ந்தால், குறைந்த பணத்தில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறிய காலை ராஜனும், அவரது மனைவி மைதிலியும் பிரபுவையும்,பிரபுவின் மூலமாக அவருக்குத் தெரிந்தவர்களையும் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை குலுக்கல் சீட்டில் சேர்த்துள்ளனர்.
 
ஒவ்வொருவரும் தலா 15 ஆயிரம் ரூபாய் கட்டிய நிலையில்,குலுக்கல் நடத்தாமல், பணத்தை மோசடி செய்து,காலைராஜனும் அவரது மனைவியும் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக  ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
 
குலுக்கல் சீட்டு நடத்தி பலரிடம்  கோடி கணக்கில்   பணம் வசூலித்து மோசடி செய்த சம்பவம் நாட்டரசன் கோட்டை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments