Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஜி மீது பெண் போலீஸ் பாலியல் புகார் - காவல்துறையினர் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (14:16 IST)
காவல்துறையில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரியான ஐ.ஜி .மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை லஞ்ச ஒழிப்புதுறையில் இயக்குனருக்கு அடுத்த பதவியில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரி, அவருக்கு கீழ் பணி புரியும் பெண் எஸ்.பிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அந்த பெண் அதிகாரி லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் ஜெயந்த் முரளியிடம் புகார் கொடுத்தார். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
அதோடு, அந்த அதிகாரியின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.  இதனால், அந்த பெண் அதிகாரி டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். ஆனால், அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இதனால், அந்த பெண் அதிகாரி முதல்வரின் செயலாளர், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரிடம் நேற்று முன் தினம் புகார் அளித்தார். எனவே, அவர் ஏற்கனவே அளித்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மற்றும் டிஜிபி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
 
இதையடுத்து, பெண் போலீஸ் அதிகாரி சீமா அகர்வால் தலைமையில் தற்போது விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், உயர் அதிகாரி மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்