Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கையை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவர்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (12:58 IST)
பொறியியல் படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் திருநங்கை ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 7 மாதம் அவருடன் குடும்பம் நடத்திய மாணவரை அவரது பெற்றோர்கள் பிரித்து சென்றுவிட்டனர்.


 
 
சேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில் பொறியியல் படித்து வந்தார். இவருக்கும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்த ஸ்ரீதேவி என்ற திருநங்கைக்கும் காதல் ஏற்பட்டது.
 
இதனையடுத்து இருவரும், திருமணம் செய்துகொண்டு, ஸ்ரீதேவியின் வீட்டில் கடந்த 7 மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தங்கள் மகன் திருநங்கையை திருமணம் செய்துகொண்டு திருச்சியில் வசித்து வந்ததை அறிந்த கணேசனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீசார் திருநங்கை ஸ்ரீதேவியை அழைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தான் கணேசனுக்கு 7 மாதமாக சாப்பாடு போட்டுள்ளதாகவும், அதற்கான பணத்தை நஷ்ட ஈடாக கொடுத்தால் பிரிந்து விடுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
 
பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடச் சொல்லி மாணவன் கணேசனை பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்க தடை..!

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments