Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் தகராறில் கல்லூரி மாணவி அடித்துக் கொலை !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:29 IST)
காரைக்குடி அருகே  காதல் தகராறு காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் உள்ள அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் 3 ஆம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி சினேகா. இவர், இலுப்பைக்குடி குடியிருப்பைச் சேர்ந்த சென்டிரிங் வேலை செய்து வரும் கண்ணன் என்பவரை 3 ஆண்டுகளாகக்   காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததை அடுத்து, கண்ணன், சினேகாவின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார்.

அதன்பின், சினேகா, கண்ணனிடம் பேசாமல் தவிர்த்துவந்துள்ளார்.  இந்த நிலைடில், சினேகா ரேசன் கடை அருகில் வந்தபோது, அவரை வழிமறித்த கண்ணன் அவரிடம் பேசியுள்ளார், அப்போது, சினேகா தன் டூவீலரில் செல்ல முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த சென்ட்டிங் கம்பியால் சினேகாவின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார் கண்ணான்.

இதுபற்றித் தகவல் அறிந்து, பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து சினேகாவை மீட்பதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments