Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva
திங்கள், 27 மே 2024 (14:25 IST)
கோவையில் பெண் மருத்துவர் தனது லேப்டாப்பில் சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவையை சேர்ந்த சரணிதா என்ற பெண் மருத்துவர் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நிலையில் அவர் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கியதால் தூக்கி எறியப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து விடுதி நிர்வாகி காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரணிதா கையில் சார்ஜரை பிடித்தபடியே உயிரிழந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments