Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகவத் கீதா தியான ஸ்லோகங்களை கூறி ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த-ஏழு வயது சிறுவன்!

J.Durai
புதன், 15 மே 2024 (14:37 IST)
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன்.
 
நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா  என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர் பகவத் கீதா படிப்பதை ஆர்வமுடன் கவனித்துள்ள இவரின் திறமையை கண்ட ராதா பகவத் கீதாவின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கூறி பயிற்சி  அளித்துள்ளார்.இந்த நிலையில் சிறுவன் ஒன்பது அத்தியாங்கள் கொண்ட கீதா தியானா ஸ்லோகங்களை அச்சு பிசகாமல் தெளிவாக கூற துவங்கியுள்ளார்.சிறுவன் திரிசூல வேந்தனுக்கு முறையாக அளித்த பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் கீதா தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி அசத்தியுள்ளார்.இவரது இந்த சாதனை  ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது..இது குறித்து சிறுவன் கூறுகையில்,ஏற்கனவே பஞ்சாங்கத்தை தாம் வேகமாக படித்துள்ளதாகவும்,அதன் தொடர்ச்சியாக கீதா தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்த்தாக கூறினார்.. 
 
ஒன்பது அத்தியாங்கள் கொண்ட சமஸ்கிருத கிதா தியானா ஸ்லோகங்களை கோவையை சேர்ந்த  ஏழு வயது சிறுவன் கூறுவதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments