திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (14:24 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில் இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பேட்டி அளித்த போது இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர் என்றும் தெரிவித்தார். 
 
திமுக ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர் என்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி ஆச்சாரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
இந்த வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 தொகுதிகளுக்கு சம்மதிக்க முடியாது.. தவெகவுடன் கூட்டணி.. ராகுல் காந்தி அதிரடி முடிவு?

போர் எதிரொலி!.. 33 விமான சேவைகள் ரத்து!.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி..

விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

48 முக்கிய ஈரானிய தலைவர்களை கொன்றுவிட்டோம்.. டிரம்ப் கொக்கரிப்பு..!

இன்றும் நாளையும் பங்குச்சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு.. நிம்மதியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments