Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதலமைச்சர் ஸ்டாலின்.. கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பு..!

Mahendran
செவ்வாய், 26 மார்ச் 2024 (12:46 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் இன்று அவர் தூத்துக்குடியில் கனிமொழிக்காக காலை முதல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது மீனவர் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார். தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் நடந்து வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வந்தார்.
 
அப்போது வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்று முதல்வர் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்று காலை முதல் முக ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு மீனவர்கள், காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். மேலும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments