தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது பூத உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக அமைச்சர்கள் யாரும் அழவில்லை என பேசப்பட்டது.
ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது அழுதுகொண்டே புதிய முதலமைச்சரும், அமைச்சரவையும் பதவியேற்றது. ஆனால் அவர் மரணமடைந்தபோது யாரும் அழவில்லை என விமர்சிக்கப்பட்டது.
நன்றி: ETV
ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு கண்ணீர் அழுத காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.