Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுநாளைய வேட்கையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார் - வைகோ பெருமிதம்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (05:18 IST)
தமிழர்களின் நெடுநாளைய வேட்கையை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளார் வைகோ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழர்களின் நெடுநாளைய வேட்கையான ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்ற பெயரை, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று மாற்ற தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதுபோலவே, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments