Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுநாளைய வேட்கையை முதல்வர் நிறைவேற்றி உள்ளார் - வைகோ பெருமிதம்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (05:18 IST)
தமிழர்களின் நெடுநாளைய வேட்கையை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளார் வைகோ கூறியுள்ளார்.
 

 
இது குறித்து வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழர்களின் நெடுநாளைய வேட்கையான ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என்ற பெயரை, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று மாற்ற தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்று பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதுபோலவே, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆக்கவும் தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments