கோவை சிறையில் கைதிகள், வார்டன்கள் இடையே மோதல்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:40 IST)
கோயம்புத்தூர் மத்திய சிறைக்குள் வார்டன்கள், கைதிகள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறை செயல்பட்டு வரும் நிலையில், இங்குள்ள சிறைக் கைதிகள் மற்றும் வார்டன்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த திடீர் மோதலில், கைதிகள் தாக்கியலில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வார்டன்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக் கொண்ட கைதிகள் தங்கள் கைகளில் பிளேடால்  கீறிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள்,வார்டன்கள் இடையேயான மோதல் விவகாரம் தொடர்பாக டிஐஜி சண்முகசசுந்தரம் சிறை வளாகத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments