Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. சித்ராவின் தந்தை புதிய மனு தாக்கல்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:45 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
விசாரணையை இழுத்து அடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேமந்த் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் சித்ராவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
 
முதுமை காரணமாக வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு வாய்தாவின் போது தன்னால் திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாகவும் சித்ராவின் தந்தை தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை விரைவில் நடைபெற உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments