Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைத்துறையை அடுத்து மருத்துவ துறையிலும் பாலியல் கொடுமை: இறங்கி அடிக்கும் சின்மயி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (22:39 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்ததாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் 'மீ டூ' ஹேஷ்டேக்கில் சின்மயி களமிறங்கியதும் பல இடங்களில் பாலியல் தொல்லை இருந்துள்ளது என்பதும் பலர் அதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் திரைத்துறை மட்டுமின்றி மருத்துவ துறையிலும் இதுபோன்ற பாலியல் கொடுமை நடந்துள்ளது தற்போது சின்மயி மூலம் வெளிவந்துள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் தனக்கு மயக்க மருந்து கொடுத்து முட்டு வலி அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தன்னுடைய மார்பகத்தை உதவி டாக்டர்களும் வார்டு பாய்ஸ்களும் தடவி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தான் அரை மயக்கத்தில் இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்ததாகவும் ஒரு பெண் குறிப்பிட்டு அதனை சின்மயிக்கு அனுப்பியுள்ளார். சின்மயி இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள ஒருசில குறிப்பிட்ட மருத்துவமனைகளின் பெயர்களை குறிப்பிட்டு அங்கும் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் நடப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் இன்னும் எந்தெந்த துறையில் என்னென்ன நடந்தது என்ற விபரங்கள் வெளிவர போகின்றதோ தெரியவில்லை

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்