Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (10:46 IST)
தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முப்படை அதிகாரிகளுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
 
சமீபத்தில் ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட நிலையில் இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டாலும் இன்னும் ஒருசிலரின் நிலை என்னவென்று தெரியவில்லை
 
இந்த நிலையில்  சென்னை தலைமைச் செயலகத்தில் முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 
 
கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு மற்றும் கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்து அவர் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வட தமிழகத்தை நெருங்கும் புது புயலை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments