Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-திருச்சி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் மாற்றம்..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (09:50 IST)
சென்னை - மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை - திருச்சி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை - திருச்சி தேஜாஸ் ரயில் நிற்கும் என அறிவிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன், திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றதை அடுத்து அதனை அங்கிருந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதனை அடுத்து தாம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை - திருச்சி தேஜஸ் ரயில் தாம்பரத்தில் இரண்டு நிமிடங்கள் மட்டும் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மீண்டும் தேஜஸ் ரயிலை சென்னை - மதுரை வரை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments