Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்: தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:04 IST)
சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட விருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயிலாக இயக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையிலான வந்தே பார்த் ரயிலில் அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட ரயிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments